வியாழன், 9 ஏப்ரல், 2009

இலங்கை அரசின் புதிய யுக்தி

தொலைக்காட்சிகளின் பட்டியலில் நமது தமிழக தொலைக்காட்சிகள் எண்ணிகையில் முதல் இடம் வகிக்கின்றன .
இதில் ஒன்று இரண்டு தவிர அனைத்தும் தமது மொழி மற்றும் இனத்தை மறந்து சுயநலத்தோடு தினம் பணம் மற்றுமே குறிக்கோளாக செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது தெரிந்ததே .

இலங்கையில் விஷ வாயு தாக்கி இனம் அழியும் நிலையிலும் சினிமாவாலும் மற்றும் செய்திகளாலும் இருட்டடிப்பு செய்து கொண்டு இருக்கும் நமது தொலைக்காட்சிகள் .
மறைமுகமாக இன அழிப்புக்கு அறுதுனையாகவே இருக்கிறது.
இதை கண்டு மகிழ்ச்சி கொண்டு இருக்கும் இலங்கை அரசு .ஓர் இரு தமிழ் தொலைக்காட்சிகள் (தீபம் மற்றும் மக்கள் )போராடி கொண்டு இருக்கிறதை கண்டு
hotbird satellite இல் அவசர அவசரமாக இரண்டு அலை வரிசை வாங்கி கொண்டு
(எனக்கு தெரிந்து) அதில் நமது அரசியல் வாதிகள் போல் குணம் உடைய தமிழ் ? கூலி ஆள்களை வைத்து இலங்கை அரசின் செய்திகள் மட்டுமே தமிழில் பரப்பி கொண்டு இருக்கிறார்கள் (Dan tamil oli)நம் மக்கள் எப்போதும் மயங்கி கிடக்கும் ஆட்டம் பாட்டம் அதின் கவர்ச்சி .

தமிழ் இனத்தின் அழிப்பின் முக்கிய பங்கு நமது ஊடகங்களுக்கும் உண்டு நாம் இதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறோம் .

எல்லோரும் ஆட்டம் பாட்டம் ,கொண்டாட்டத்தோடு இருப்போம்...!!!!!!