வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
தமிழன் ..: வீரம் ,மானம் ,உண்மை,பண்பு நிறைந்தவன் ,தலை குனியாதவன்,எதையும் தாங்கும் இதயம் உள்ளவன் ,மனிதனை மதிக்கத் தெரிந்தவன் ,மானம் மற்றும் சுதந்தரத்துக்காக உயிரை கொடுப்பவன் ,எல்லாத்துக்கும் மேலாக மனிதன் ,என்று உணர்த்திய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்..



















வாழ்க தமிழ்..



புதன், 14 அக்டோபர், 2009

இலங்கையில் என் தமிழன் நிலை…

இலங்கையில் என் தமிழன் நிலை…



தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வீரப்பாடல் படித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டன. தமிழன் என்று சொன்னாலே தலை போய்விடுமோ என்ற அச்சம்தான் இப்பொழுது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரவிக்கிடக்கின்றது. அங்கே நம்மின மக்கள் சிங்களவர்கள் மத்தியில் அவர்களைப் போலவே வேடமிட்டு வாழ்ந்து வருவதைக் கண்டு உள்ளம் கொதி......

தமிழன் என்று சொன்னாலே ‘விடுதலை புலி’ என்று சந்தேகப்பட்டு இராவணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிடுவதாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் கூறினர். மேலும் தமிழர்கள் சொத்துகளை இலங்கை அரசு அபகரித்துக்கொள்கிறது எனவும் குற்றம் சாட்டினர். தாய்மொழி பேசவும் அஞ்சி சிங்களம் பேசி, சிங்களவர்கள் போலவே பொய்யான வாழ்க்கை முறையைப் பெரும்பாலானத் தமிழர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன.

வாகனங்கள் வைத்திருக்கும் தமிழர்களைக் குடும்பத்தோடு வாகனத்தோடு எரித்து விடும் சிங்களவர்களின் வெறியாட்டத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். இதனாலேயே வாகனம் வைத்திருக்கும் தமிழர்கள் அதனை விற்றுவிட்டு வேறு வாடகை வண்டியில் பயணம் செய்கின்றனர். தமிழ்ப்பெண்கள் பொட்டு வைக்கவும் அஞ்சுகின்றனர். கோயிலுக்குச் செல்லும் பெண்கள் கூட இட்ட குங்குமத்தை கோயில் வளாகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே அழித்துவிடுவதையும் கண்டேன்.

இனி என்ன சமாதானம் பேசினாலும் இலங்கையில் தமிழர்கள் வாழ்வது ஆபத்தானது என்றே தோன்றுகிறது. சிங்களவர்களின் இனவெறி எல்லையைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அமைதியைப் போதிக்கும் புத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர்களால் எவ்வாறு மிருங்களைப் போல் செயல்பட முடிகின்றது என்பதுதான் தெரியவில்லை. தமிழர்கள் கடைத்தெருவிற்குப் போவதற்கும் அஞ்சுகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பிடித்துச் செல்லப்படுவர்கள் மீண்டும் வீடு திரும்புவதில்லை. சிங்கள இளைஞர்கள் நம் தமிழ் இளைஞர்களை வேண்டுமென்றே உசுப்பேற்றி வம்பிழுக்கும் பழக்கமும் அங்கே தோன்றியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அவர்கள் ஆண்பிள்ளைகளே ஆயினும் வீடு திரும்ப தாமதம் ஆனால் கலவரம் அடையும் நிலை. சென்ற பிள்ளை உயிரோடு வருவானா இல்லை ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொள்வானா என்றே ஒவ்வொரு பெற்றோரும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர்.

வெளியே செல்லும் பிள்ளைகளிடம், யாராவது வம்புக்கு இழுத்தாலும் அமைதியாக வாருங்கள்; சிங்களவன் உங்களை அடித்தால் அடியை வாங்கிக்கொள்ளுங்கள். திருப்பி அடித்துவிடாதீர்கள்.. இது அவர்கள் நாடு. தற்போது நாம் இருக்கும் நிலைமையில் அடங்கித்தான் செல்ல வேண்டும் என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லிச் சொல்லி அனுப்புகின்றனர்.

தங்கள் பிள்ளைகளை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதே அங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம்.. தங்களுக்கு என்ன நேரிட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறும் போதே குரல் தழுதழுக்கின்றது.. அதற்காக பல இலட்சம் வெள்ளிகளை செலவழிக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக்கொண்டு பல ஏஜென்சிகள் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றிவிடுவதும் உண்டு. இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கின்றது.
என்ன செய்யப் போகிறார்கள் எப்படி வாழப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பணப்பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே போவதாக பலர் சலித்துக்கொண்டனர். இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் நமது தமிழர்களின் நிலை விடை தெரியா புதிராகவே இருக்கின்றது.

பண வசதி உள்ளவர்கள் எப்படியாவது வெளிநாட்டிற்குச் சென்று பிழைத்துக்கொள்கின்றனர். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எப்படி வாழப் போகிறார்கள்? அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்?
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். எப்படியாவது உதவ வேண்டும்!

தமிழ் இனத்தின் எதிர்காலம் சூன்யமாக கண் முன்னே தோன்றித் தோன்றி மறைகின்றது!

._.___
.
I am just posting a message from an email created by someone else.
No copyright infringement intended!



செவ்வாய், 7 ஜூலை, 2009

ஈழத்திற்காக ...MJ... பாடல்....

இந்த பாடலை பார்க்கும்போது...நம்..ஈழத்திற்காக....பாடினது ..போல்.உள்ளது..
MJ..மறைந்தும் வாழ்கிறார்...

சனி, 30 மே, 2009

மறைக்கப்பட்ட உண்மைகள் ..டைம்ஸ் பத்திரிகையின் வெளியிடு...

இது தான் தலைப்பு...

"The Times exposes the hidden massacre of தமிழ்"..


Please click on the image for larger view and do read the captions in each picture.

Courtesy .TIMES.
















நமது தமிழ்?? பத்திரிகைகளுக்கு இது என்ன வென்ற தெரியாது..

புதன், 20 மே, 2009

ராஜபக்சே ஜி11 மகாநாட்டில் இருந்து பாதியில் திரும்பியதற்கான ரகசியம் ..?


ராஜபக்சே ஜி11 மகாநாட்டில் மேலே உள்ளது போன்றே கம்பெனியிடம் பேரம் பேசி ஒரு mask வாங்கி கொண்டு வேக முகமாக நாடு திரும்பினான் .



அதை அங்கே வரவேற்க வந்த ராணுவ அதிகாரிகளிடம் கொடுத்து அனுப்பினான்







.அதை வேக வேக மாக இறந்து கிடந்த ஒரு உடல் மீது பொருத்தும் போது முட்டாள் பசங்க அதை கிழித்து விட்டார்கள் .இந்த வீடியோ படம் எப்படியும் ராஜபக்சே நாடாளமன்ற ஸ்பீச் க்கு முன் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டளை.
mask கிழிந்து விட்டதால் என்ன செய்ய என்று திணறிய போது இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்கள் அவர்கள் அங்கு வந்து சேர மதியம் ஆகி விட்டது அதற்கு அப்புறம் அதை எப்படி பொருத்தி காட்ட வேண்டு பயற்சி பெற்ற பின் வீடியோ எடுக்க பட்டது.
இதை உலகம் நம்பாது என்றும் விரைவில் உண்மை வெளியாகும் என்று அஞ்சி ராஜபக்சே பிரபாகரன் மரணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்,
பேசினால் எல்லாம் பொய் தான் பேசினான் என்று தெரிந்து விடுமாம்.

வாழ்க தமிழ் இனம்.ஈழம் விரைவில் ....

வியாழன், 30 ஏப்ரல், 2009

ஈழம் 30.04.09 நன்றி. இந்தியா நன்றி தமிழக அரசியல் தலைவர்களே


ஈழம் 30.04.09....
மக்கள் இலங்கை ராணுவ Camp களில்
வருடங்கள் சுதந்திரமாக உயிருக்கு காக்க
ஓடினார்கள் இப்பொழுது அந்த உயிர் வாழ்கின்ற சுதந்திரம் கூட இல்லை








நன்றி.
இந்தியா நன்றி தமிழக அரசியல் தலைவர்களே
C ourtesy Tamil Net.



திங்கள், 27 ஏப்ரல், 2009

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேடியது இது தா..?

யாருக்கு வேண்டும் கலைஞரின் உண்ணாநிலை..கலைஞர் செய்ய வேண்டியது இது தான்.?

அடிபடையான் செயல்.

1.அனைத்து தமிழ் MP கள் ராஜினாமா ,நாடாளுமன்றம் முன் அவர்களின் போராட்டம்.
2.அனைத்து உடகங்களில் (suntv,kalaignar,பொதிகை) இலங்கையின் உண்மை நிலைமை.
3.Congress Allaince முடிவு .
4.அங்கே போரில் இருந்து வெளிய வரும் உங்கள் உடன்பிறப்புக்களின் நிலை பற்றி தினம் ஒரு அறிக்கை.அந்த ஆதாரங்கள் மத்திய அரசுக்கு சமர்பித்தல்.
5.U.N.க்கு 6 கோடி மக்களின் சார்பாக உங்கள் பிரிதிநிதி ஒருவர் .

இது போதும் கலைஞரே....நீங்கள் தமிழை காப்பற்றி விடலாம்.

புதன், 22 ஏப்ரல், 2009

மனிதர்களா இவர்கள் ?

இல்லை இது ஒரு பொழுது போக்கு காட்சி படங்கள் தினம் உலகம் மற்றும் நமது தமிழக அரசியல் வாதிகள் கண்டு மகிழுந்து vote வேட்டை எப்படி செயலாம் என்று சிந்திக்க வைக்கும் ஒரு தொகுப்பு படம்.
தினம் ,சோனியா,கலைஞர்,ராமதாஸ் ,ஜெயலலிதா,வைகோ ,விஜயகாந்த் ,எல்லோருக்கும் இது ஒரு entertainment .


மூன்று வருடகங்களுக்கு மேலாக மூன்று லட்ச மக்கள் எப்படி மனிதர்கள் வாழ்வார்கள் என்று மறந்து விட்டார்களா

















ஓடி ஓடி உழைக்கணும் என்பது இவர்களுக்கு பொருந்தாது ஓடி ஓடி உயிர் வாழனும்





உலகம் மூன்றாம் உலக போருக்கு ஆயத்தமாகி கொண்டு இருப்பதுக்கு இது ஒரு சாட்சி .இன்று இவர்கள் நாளை யார்..??????????????

யாருக்கும் இவர்களும் மனிதர்கள் தான் என்று ஏன் உணர்வு வரவில்லை.?

வியாழன், 9 ஏப்ரல், 2009

இலங்கை அரசின் புதிய யுக்தி

தொலைக்காட்சிகளின் பட்டியலில் நமது தமிழக தொலைக்காட்சிகள் எண்ணிகையில் முதல் இடம் வகிக்கின்றன .
இதில் ஒன்று இரண்டு தவிர அனைத்தும் தமது மொழி மற்றும் இனத்தை மறந்து சுயநலத்தோடு தினம் பணம் மற்றுமே குறிக்கோளாக செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது தெரிந்ததே .

இலங்கையில் விஷ வாயு தாக்கி இனம் அழியும் நிலையிலும் சினிமாவாலும் மற்றும் செய்திகளாலும் இருட்டடிப்பு செய்து கொண்டு இருக்கும் நமது தொலைக்காட்சிகள் .
மறைமுகமாக இன அழிப்புக்கு அறுதுனையாகவே இருக்கிறது.
இதை கண்டு மகிழ்ச்சி கொண்டு இருக்கும் இலங்கை அரசு .ஓர் இரு தமிழ் தொலைக்காட்சிகள் (தீபம் மற்றும் மக்கள் )போராடி கொண்டு இருக்கிறதை கண்டு
hotbird satellite இல் அவசர அவசரமாக இரண்டு அலை வரிசை வாங்கி கொண்டு
(எனக்கு தெரிந்து) அதில் நமது அரசியல் வாதிகள் போல் குணம் உடைய தமிழ் ? கூலி ஆள்களை வைத்து இலங்கை அரசின் செய்திகள் மட்டுமே தமிழில் பரப்பி கொண்டு இருக்கிறார்கள் (Dan tamil oli)நம் மக்கள் எப்போதும் மயங்கி கிடக்கும் ஆட்டம் பாட்டம் அதின் கவர்ச்சி .

தமிழ் இனத்தின் அழிப்பின் முக்கிய பங்கு நமது ஊடகங்களுக்கும் உண்டு நாம் இதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறோம் .

எல்லோரும் ஆட்டம் பாட்டம் ,கொண்டாட்டத்தோடு இருப்போம்...!!!!!!

சனி, 21 பிப்ரவரி, 2009

ஆ தி மூ க .,காங்கிரஸ் .ஓர் ஒற்றுமை

காங்கிரஸ்:அயல் நாட்டு தலைமை .

இந்தியர்கள்(தமிழர்கள் )உயிர்கள் மற்றும் உணர்வுகலக்கு சிறிதும் ஏன் மத்திய அரசு மதிப்பு கொடுக்க வில்லை என்று.பல கோணங்களில் பார்த்தல்.ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெறிக்கிறது,ஒரு அயல் நாட்டு பெண் மணிக்கு எப்படி புரிய சாத்தியம் இது எல்லாம்.கஷ்ட பட்டு இந்தி கற்று கொண்டு திக்கி திக்கி பேசும் ஒரு பெண்ணுக்கு எப்படி இந்திய உணர்வு புரிய சாத்தியம்.
அவர்களிடம் இத்தாலிய மொழியில் அல்லவா பேச வேண்டும்.


ஆ தி மூ க:அயல் மாநில தலைமை

ஆண்டுகள் பல ஆயினும் இன்னும் தமிழக அரசு ஒரு minority அரசு என்று தமிழில் கூட அதை சொல்ல தெரியாமல் பால் வாடி குழைந்தை போல் கூவி கொண்டு இருக்கும்.ஒரு தமிழ் உணர்வே இல்லா கன்னட நடிகையிடம் ஆ தி மூ க.
இந்த தலைமை நம்ம தமிழகத்தில் வந்தால் தமிழ் உணர்வை எப்படி தமிழில் சொல்லி உணர்த்த முடியும்.கன்னடத்தில் சொன்னால்தான் ஈழம் என்றால் என்ன என்று புரியும்.


தமிழக் மக்கள் இது நாள் வரையில் யார்ருக்காகவும் vote போட்டது கிடையாது.எல்லாம் தோற்க அடிக்க வேண்டும் என்று thaan எதிராக போட்டு வருகிறார்கள் .இந்த தருணத்தில் எச்சரிக்கையாக நாம் செயல் பட வேண்டும்.
எதிராக போட வேண்டும் என்று எந்த ஒரு மன நோயாளிகளுக்கு போட்டு விடாதிர்கள்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

திங்கள், 16 பிப்ரவரி, 2009

தமிழன் ஒரு கோமாளியா...?





பல உண்ணாநிலை,பல மேடை பேச்சு, பல மனித சங்கிலி போராட்டம் ..?முடிவு..?
நமது தலைவர்கள் நினைத்தால் ஓர் முகமாக இந்த போராட்டத்தை .ஒற்றுமையாக ஒரே குரலில்,ஒரே பாதையில் வழி நடத்தினால் நிச்சயம் அதற்க்கு பலன் கிடைக்கும்

அரசியல் கட்சிகளின் உள் நோக்கம் தான் என்ன,vote க்காக கண் துடைப்பு வேலையா இல்லைஉணர்வு பூர்வமான செயலா.



தேவை ஓர் இரும்புகரமான போராட்டம்


அரசியல் கட்சிகளை விட நமது வழக்குஅரிங்கர்கள் போராட்டங்கள் பாராட்டத்தக்கது ,அனால் பாதை அற்றதாக தோன்றுகிறது

நமது வழக்குஅரிங்கர்கள் போராட்டங்கள் இன்னும் அவர்கள் தொழில் ரீதியாக,சட்டரீதியாக எடுத்தால் நன்மையாக இருக்கும் .

தேவையில்லை,உண்ணாநிலை ,சாலை மறியல்


செயல் -1


கீழ் காணும் அனைத்து சர்வதேச குற்றங்களை புரியும் ராஜபக்சேவுக்கு எதிராக ஏன் சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய கூடாது .இதற்க்கு தடை என்ன. ?


1. Murder
, a crime against humanity, punishable under Article 5(a) of the Statute [of the Criminal Tribunal], and also a violation of the laws or customs of war, punishable under Article 3 of the Statute (namely a violation of Article 3 common to the 1949 Geneva Conventions);

2. Persecutions on political, racial or religious grounds, a crime against humanity pursuant to Article 5(h) of the Statute [of] the Tribunal; and

3. Deportation, a crime against humanity, punishable under Article 5(d) of the Statute of the Tribunal.


இந்த மேல் காணும் sections அடிப்படையில் தான் கொசோவோ இன படுகொலை செய்த தலைவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ய பட்டது.

அதே போல அரசியல் ரீதியாக நமது அரசியல் கட்சிகள் சர்வதேச சமுகத்தை நாட வேண்டும்,தேவை இல்லை கிணற்று தவளை தனமான போராட்டங்கள்.

செயல் - 2

ஐ .நா. வுக்கு அரசு ரீதியாக,இந்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது.

இலங்கையில் நடக்கும் படுகொலை. Rawanda மற்றும் Kosovo க்கு நிகரானது .


அதே போல் நமது மத்திய அரசை எந்தவிதத்தில் செவி கேக்க செய்வது என்ற அறிவுடன் செயல் படலாம் .தேவையில்லை தீக்குளிப்பு மற்றும் உண்ணாநிலை.அது அந்த காலம். தமிழா


தினம் தினம் வரும் செய்தி அரசியல் தலைவர்களை ஒன்றும் பாதிக்கவில்லையா.தினம் சோறு சாப்பிடும் போது அதில் ரத்தம் தெரியவில்லையா.

எதற்கு தாமதம்.எல்லாம் முடிந்த பின் .இரங்கல் கூட்டங்களை நடத்தி vote கேக்கவா .கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.மனசாட்சியுடன் இத்தருணத்தில் செயல் படுங்கள்.இல்லை என்றால் உங்கள் கோமண துணி கூட .மற்ற இனத்தாரால் உறவபடும் தலைவர்களே.

ராஜா தந்திரம் இந்த விஷயத்தில் காட்டுங்கள் .நாற்காலி பிடிப்பது மற்றும் காத்துகொல்வதிலும் வேண்டாம்.

தலைவா உன் இனத்தை இப்போது காத்துகொள் இல்லையனில் உன் பேரபிள்ளைகள் அடிமைகளாக வாழ வேண்டி இருக்கும் .

வாழ்க தமிழ் ..

(எழுத்து பிழை மன்னிக்க பட வேண்டும்)



திங்கள், 9 பிப்ரவரி, 2009

மருமகளின் பரிசும் மனைவியின் தண்டனையும்


மருமகளின் பரிசும் மனைவியின் தண்டனையும்....(தெளிவாக பார்க்க க்ளிக் செய்யவும்.)

புதன், 4 பிப்ரவரி, 2009

ஒற்றுமைக்கு ஒரே சொல் தமிழன் ..

சாதிக்காகவும் ,தன் மதத்துக்காகவும், கொள்கையையும் மானத்தையும் அடகு வைக்கும் தமிழன்.
பிற நாடு மற்றும் இனத்திடம் அடிமையாகவே வாழ விரும்பும் .தமிழன் ஒரு தமிழன் கீழ் வாழ விரும்ப மாட்டான் .

அந்த நற்குணத்தின் பட்டியல்.

1.இத்தருணத்தில் கிரிக்கட்டை புறகணிப்போம் என்று .தமிழன் குரல் கொடுத்தால்.
அவன் சொல்ல நான் ஏன் கேட்கவேண்டும .(தமிழிஷிலும் அந்த ஒற்றுமைய பார்த்தோம்) .இந்த விஷயத்தில் மக்கள் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்து.கிரிக்கெட் பற்றி ஒரு செய்தி இல்லை.

2.கடை அடைப்பு யாருக்கு.? அது வெற்றி என்று ஒரு தொலைக்காட்சியும் (மக்கள்).அது தோல்வி என்று ஒரு இனத்தாரும் (ராஜ்,சன்,கலைஞர்.ஜெயா ).
தேடி சென்று பேட்டி வேறு.

3.பல போராட்டங்கள் பல உண்ணாவிரதம் எல்லாம் துளி துளியாக ..(விரைவில் காய்ந்து விடும்) ஒன்று சேர்ந்து பெரும் வெள்ளமாக மாற தடை என்ன.

4.ஒரு இனத்தார் "இலங்கை தமிழர் பாதுக்கப்பு இயக்கம்" உருவாகிறது.
மற்றொரு "இனம் இலங்கை தமிழர் நலன் உரிமை பேரவை ".காரணம் அவன் சொல்லி நான் என்ன கேட்கவேண்டு.இந்த இரு அமைப்புமே ஒருவர்க்கு ஒருவர் போட்டியிடுவதில் தான் அதிக நாட்டம் காட்டும் ஒழிய .மக்களை காக்குமா என்பது
கேள்வி குறி.?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது .சிறிதளவாவது மனதில் இருந்தால் .எந்த இனமும் அழிந்ததாக சரித்தரம் இல்லை.

உதாரணம் யூதர் இனம்.நாடே இல்லாமல் இருந்த யூதர் இனம் .பல இன படுகொலைகளை சந்தித்த அந்த இனம் .தன் ஒற்றுமையால் உலகிலே பெரிய வல்லரசாக மாறி உள்ளது .

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உலக வஞ்சகர்களும் 2,50,000 போர் விரர்களும்

48 மணி நேர போர் நிறுத்தம் தெரிவித்தும் ,பொது மக்கள் களத்தை விட்டு ,வெளி வர மறுத்து விட்டார்களா.
இங்கு நம் மூட அமைச்சர்கள் ,எங்களால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது .
எல்லா பொது மக்களும் பாதுகாப்பான் இடத்துக்கு குடி பெயருங்கள் என்று சொல்கிறார்கள்!.வன்னியில் இருந்து ஒலிக்கும் குரல்..எங்கே அந்த பாதுக்காப்பான இடம் .என்று.?இங்கு சட்டசபையில் உள்ள குருடர்கள் மற்றும் செவிடர்கள் காதில் விலவா செய்யும் .? இல்லை.
மற்ற நாட்டு தலைவர்களுக்கு இருக்கும் சிறிதளவு அறிவு நம் தலைவர்களுக்கு இல்லை.?மந்தமான ஐ. நா வுக்கே! ..அங்கே ஒரு பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லை என்று தெரியும் போது.அருகே இருக்கும் நம் வீர தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லையே .?

இப்பொழுது வெளியான செய்தியின் படி ,இலங்கை ராணுவத்துக்கு எதிரான் தாக்குதலில் பொதுமக்களும் பங்குபெற்றார்கள் என்று கேட்கும் போது .என் நெஞ்சில் ..தோன்றும் அலை
1.அமெரிக்க புரட்சி போர் -1775 -1783.
2.வியட்நாம் போர் .1959 -1979.
3.இந்திய சுதந்திர போர் 1857.

என்ற வெற்றி பட்டியலில்..இதுவும் சேரும்..

என்ன விலை கொடுத்தாலும் நம் பூமியைய் எதிரிகளிடம் இருந்து காப்பற்றிய தீருவோம்.இல்லையெனில் இந்த பூமியிலேயே நிரந்தரமாக புதைபடுவோம் என்று.!!.வீர முழக்கம் உலகை அதிர வைக்கிறது .

வெள்ளி, 30 ஜனவரி, 2009

தமிழர்களுக்காக உழைக்கும் டாப் 10 .தமிழர்கள்.

தமிழர்களுக்காக உழைக்கும் டாப் 10 .தமிழர்கள்.
.
1.கருணாநிதி(அரசியல் வாதி ) : அரசியல் சாணக்கியன் . வருகிற நாடாளுமன்றத்தில் எத்தணை எம். பிகள் தீ .மு .க வுக்கு கிடைக்கும் என்ற பேரத்தில் வாயை பொத்தி கொள்ளுமார்று சோனியா விடுத்த கோரிக்கையின் படி படுத்து கிடக்கும் நம் முதல்வர் .






2.வை. கோ(சந்தர்ப்ப வாதி) :அரசியல் ஆதாயத்துக்காக் தன் கொள்கையைய் அடகு வைத்து விட்டு,ஒரு நடிகையோடு கூட்டு ,சேர்ந்து,பணம் சம்பாதித்து கட்சி வளர்க்கும் முயற்சியில் பிஸி.
(இப்பொழுது தன் குற்றத்தை உணர்ந்து ,கண் விளிதிரிக்கிறார்.?)




3.P.சிதம்பரம் ,T.R.பாலு,மற்றும் அனைத்து தமிழக, எம்.பிகள் (டெல்லிவாசிகள் ).அடுத்த பிரதமர் பதவி நமக்கு கிடைக்காதா என்ற நப்பாசையுடன் டெல்லியை சுற்றி வரும் டெல்லிவாசிகள்.


4கருணா (சிங்கள வெறியன்).தன் சுயநலத்துக்காக தன் இனம் அழிந்தாலும் பராவில்லை,தன் நண்பன் அழிந்தால் போதும் என்று கருதி கொடுரர்களின் எலும்பு துண்டுகளுக்காக !!!துரோகி.







5
.ஜெயலலிதா(கன்னடிக ) : நான் தமிழச்சி கிடையாது ,என்னை விடுங்கள்.இப்ப எப்படி பேசினால் vote கிடைக்கும் என்று மற்றும் சொல்லுங்கள்.





6.விஜயகாந்த் (ஆந்த்ராவாசி ): எனது முதல் தொழில் நடிப்பு அப்புறம் ,அரசியல் அப்புறம் நேரம் இருந்தால் பார்க்கலாம்.போதை தெளிந்த நேரத்தில் செய்திகள் படித்தல் ஓர் இரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் மயக்கம்.



7.தமிழக காங்கிரசார் ( ஒரு எம்.பி.பதவிக்காக).சோனியா அம்மையாரின் பேட்சை தட்டாமல் ,தமிழர்களுக்கா மட்டுமே.?? உழைக்கும்.தமிழர்கள்?







8.தமிழக் தொலைக்காட்சிகள் :தங்கள் திரைப்படகாங்களை விளம்பர படுத்துவதோடு சரி.அதை பார்க்க தமிழர்கள் இருப்பார்களா என்ற துளி கூட உணர்வு இல்லை.





9.தமிழக பத்திரிகை :தங்கள் ஜாதிக்கு முதல் இடம் கொடுத்து.தமிழன் முன்னேற்றத்தின் மீது வெறுப்பு கொண்டு .இலங்கையில் தமது மார்கட்டை எப்படி காப்பாத்துவது என்பதே .





10.நான்(நாம்).அறையில் உட்கார்ந்து தமிழிஷ்ல் பதிவு போட்டு விட்டு கடமை முடிந்தது .என்று என்னும் நான்(நாம்).